தொடரும் குற்றங்கள்: இளம்பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய இளைஞர் கைது!

 

தொடரும் குற்றங்கள்: இளம்பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய இளைஞர் கைது!

இளம்பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பிய பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி: இளம்பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பிய பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில்,  எனது செல்போன் எண்ணுக்கு ஒரு செல்போன் எண்ணிலிருந்து மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறி இருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவிட்டார்.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த மாரிதுரை என்ற பிஏ பட்டதாரியை கைது செய்தனர். முதலில்  தனது செல்போனில் இருந்து அந்த பெண்ணை தொடர்புகொண்டு பேசியதும், இதையடுத்து வேறு எண்ணிலிருந்து,  வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பெண் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மாரிதுரையை  நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.