தொடரும் காளையின் வெற்றி! சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்ந்தது!

 

தொடரும் காளையின் வெற்றி! சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்ந்தது!

தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்ந்தது.

கடந்த வாரம் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் பல முன்னணி நிறுவன பங்குகளின் விலை குறைவாக இருந்தது. இதனால் முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை வாங்கி குவித்தனர். மேலும சில முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை நிலையாக இருந்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஸ்டேட் வங்கி, டெக்மகிந்திரா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், கோடக்மகிந்திராவங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், இன்போசிஸ் உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், யெஸ் வங்கி, மாருதி, ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ் உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,123 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,355 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும், 172 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.149.13 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் நிறுவனங்களின் பங்குகளின் மொத்த மொத்த சந்தை மதிப்பு ரூ.149.02 லட்சம் கோடியாக இருந்தது.

பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.60 புள்ளிகள் உயர்ந்து 39,215.64 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 24.90 புள்ளிகள் அதிகரித்து 11,687.50 புள்ளிகளில் நிலை கொண்டது.