தொடரும் ஆன்லைன் உணவின் அவலம்: ஸ்விகி உணவில் கிடந்த ‘ரத்தக்கறை பேண்டேஜ்’: அதிர்ச்சி தகவல்!

 

தொடரும் ஆன்லைன் உணவின் அவலம்: ஸ்விகி உணவில் கிடந்த ‘ரத்தக்கறை பேண்டேஜ்’: அதிர்ச்சி தகவல்!

ஸ்விகி ஆப் மூலம் ஆர்டர் செய்த  உணவில் ரத்தக்கறை படிந்த பேண்டேஜ் இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: ஸ்விகி ஆப் மூலம் ஆர்டர் செய்த  உணவில் ரத்தக்கறை படிந்த பேண்டேஜ் இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வசிக்கும் பாலமுருகன் என்பவர்  ஸ்விகி ஆப் மூலம் சேலையூரில் உள்ள தனியார் ஹோட்டலில் சேஸ்வான் நூடுல்ஸை ஆர்டர் செய்துள்ளார். அதை பாதி சாப்பிட்டபின்பு, அந்த உணவில் ரத்தக்கறை படிந்த பேண்டேஜ் இருப்பதை கண்டு அதிர்ந்து போய் உள்ளார்.

 

fb

இது குறித்து பாலமுருகன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தான் ஆர்டர் செய்த உணவில் ரத்த கறையுள்ள பேண்டேஜ் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் தான்  ஸ்விகியில் புகார் அளித்ததாகவும்  இரண்டொரு நாளில் பதிலளிப்பதாக ஸ்விகியிலிருந்து பதில் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கு பிறகு அந்த ரெஸ்டாரண்டை தொடர்பு பாலமுருகன் கேட்டபோது,  பேக்கிங் செய்யும் நபருக்கு அடிபட்டு இருந்ததால், தவறுதலாக உணவு பொட்டலத்தில் பேண்டேஜ் வந்துவிட்டதாகக் கூறியுள்ளது. இதையடுத்து  ஸ்விகி நிறுவனம் பாலமுருகனிடம் மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.