தைலாபுரம் வீட்டில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்-ஸுக்கு விருந்து: சால்வை, பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அன்புமணி

 

தைலாபுரம் வீட்டில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்-ஸுக்கு விருந்து: சால்வை, பூங்கொத்து கொடுத்து  வரவேற்ற அன்புமணி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தனது தைலாபுரம் இல்லத்தில் விருந்து கொடுத்தார்.

விழுப்புரம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தனது தைலாபுரம் இல்லத்தில் விருந்து கொடுத்தார்.

epsops

அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி அமைந்துள்ளதை அடுத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு எடப்பாடி பழனிச்சாமி தேநீர் விருந்து அளித்தார். இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  இருவரையும்  தைலாபுரம் தோட்டத்துக்கு விருந்துக்கு அழைத்திருந்தார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

ramadoss

இதையடுத்து  தைலாபுரம் தோட்டத்தில்  நேற்று இரவு 9 மணிக்கு நடைபெற்ற விருந்தில்  முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் அமைச்சர்கள் பலரும், கட்சி நிர்வாகிகளும் விருந்தில் பங்கேற்றனர். 

anbumani

குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை வாசல் வரை வந்து ராமதாஸின் குடும்பத்தினர் வரவேற்றனர். அவர்களுக்குச் சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து அன்புமணி ராமதாஸ் வரவேற்றார்.

anbumani

சுமார் ஒருமணி நேரம் தைலாபுரம் தோட்டத்திலிருந்த அவர்கள், 10 மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினர். விருந்துக்குப் பின் தேர்தல் வியூகம் குறித்து இரு கட்சி தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.