தேர்தல் வரும்போது எப்படித் தாக்க வேண்டும் எனச் சொல்கிறேன், அதுவரை காத்திருங்கள்: மு.க.அழகிரி அதிரடி!

 

தேர்தல் வரும்போது எப்படித் தாக்க வேண்டும் எனச் சொல்கிறேன், அதுவரை காத்திருங்கள்: மு.க.அழகிரி அதிரடி!

தேர்தல் வரும்போது எப்படித் தாக்க வேண்டும் எனச் சொல்கிறேன், அதுவரை காத்திருங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு மு.க.அழகிரி அறிவுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல்: தேர்தல் வரும்போது எப்படித் தாக்க வேண்டும் எனச் சொல்கிறேன், அதுவரை காத்திருங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு மு.க.அழகிரி அறிவுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல்லில் மு.க.அழகிரி பேரவை சார்பில் கருணாநிதிக்கு புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய  மு.க. அழகிரி, ‘கருணாநிதியோடு தம்மை ஒப்பிட்டுப் பேசவேண்டாம், கருணாநிதியின் ஆற்றலுக்கும், திறமைக்கும் தான் சிறிதளவும் ஈடு கிடையாது. ஆனால் கலைஞரிடம் இருந்து உழைப்பு, சுயமரியாதையை  கற்றுக் கொண்டேன்’ என்று தெரிவித்தார்.

‘கலைஞர் என்னை திமுகவில் இருந்து நீக்கவில்லை, பல சதிகளால் திமுகவில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன். ஸ்டாலினுக்கு பதவி ஆசை அதிகம். தேர்தல் வரும்போது எப்படித் தாக்க வேண்டும் எனச் சொல்கிறேன், அதுவரை காத்திருங்கள்’ என்று கூறியுள்ளார்.