தேர்தலில் போட்டியிடவில்லை, ஆனால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்த சன்னி லியோன் 

 

தேர்தலில் போட்டியிடவில்லை, ஆனால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்த சன்னி லியோன் 

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின் படி பா.ஜ.க  340 தொகுதிகளிலும், காங்கிரஸ் 90 தொகுதிகளிலும், இதரக் கட்சிகள் 112 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின் படி பா.ஜ.க  340 தொகுதிகளிலும், காங்கிரஸ் 90 தொகுதிகளிலும், இதரக் கட்சிகள் 112 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

இதற்கிடையில் இன்றைய வாக்கு எண்ணிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் அனைத்து மீடியாக்களும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் அர்னாப், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் சன்னி தியோல் முன்னிலையில் உள்ளார் எனக் கூறுவதற்கு பதிலாக சன்னி லியோன் முன்னிலையில் உள்ளார் என்று கூறிவிட்டார். 

இதை பார்த்த சன்னி லியோன் இதுகுறித்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார், ‘நான் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளேன்’ என்று நகைச்சுவையாகக் கேள்வி கேட்டுள்ளார். அதை அவரது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.