தேசத்தின் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதில் நான் சக இந்தியர்களுடன் சேர்கிறேன் : மகாத்மாவின் 150 ஆவது பிறந்தநாளுக்கு ஸ்டாலின் ட்வீட்…

 

தேசத்தின் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதில் நான் சக இந்தியர்களுடன் சேர்கிறேன் : மகாத்மாவின் 150 ஆவது பிறந்தநாளுக்கு ஸ்டாலின் ட்வீட்…

இந்தியாவின் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டு வருகிறது. இந்தியாவின் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Stalin Tweet

 

 

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளுக்காக தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘தேசத்தின் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதில் நான் சக இந்தியர்களுடன் சேர்கிறேன்.அகிம்சை, இரக்கம், கருத்து வேறுபாடு மற்றும் துன்பங்களை எதிர்கொள்ளும் போது தைரியமாக இருக்க வேண்டும் என்று அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். அவரையும்  இந்தியாவைப் பற்றிய அவரது யோசனையையும் இன்று நாம் நினைவில் கொள்ள வேண்டும்.உண்மை எப்போதும் வெற்றிபெறட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.