தேங்காய் பறிப்பதில் தகராறு: மூன்று பேருக்கு மண்டை உடைப்பு!
May 8, 2020, 08:25 IST1588906547000
இங்கு மரத்திலிருந்து தேங்காய் பறித்ததாக இரு தரப்பினர் இடையில் தகராறு ஏற்பட்டு அது அடிதடியாக மாறியுள்ளது.
திருச்சி மாவட்டம், துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பகுதியில் உள்ள பெரியார் நகரில் தென்னை மரங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு மரத்திலிருந்து தேங்காய் பறித்ததாக இரு தரப்பினர் இடையில் தகராறு ஏற்பட்டு அது அடிதடியாக மாறியுள்ளது.
இதில் மூன்று பேருக்கு மண்டை உடைந்து தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேர் காயமடைந்து துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இதையடுத்து இரு தரப்பு மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த மோதலின் போது அனைவரும் குடிபோதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.