தேங்காய் பறிக்கலாமா? – எடப்பாடியிடம் ஆலோசனை கேட்ட ட்விட்டர்வாசி… எடப்பாடி என்ன சொன்னார் தெரியுமா?
தேங்காய் பறிக்கலாமா என்று ட்விட்டர் மூலம் எடப்பாடி பழனிசாமியிடம் ட்விட்டர்வாசி ஒருவர் ஆலோசனை கேட்டதும், அதற்கு முதலமைச்சர் பதில் அளித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேங்காய் பறிக்கலாமா என்று ட்விட்டர் மூலம் எடப்பாடி பழனிசாமியிடம் ட்விட்டர்வாசி ஒருவர் ஆலோசனை கேட்டதும், அதற்கு முதலமைச்சர் பதில் அளித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி, மக்களின் தொண்டன் என்று காட்டிக்கொள்ள கடும் முயற்சி செய்து வருகிறார். தற்போது தன்னை யார் வேண்டுமானாலும் எளிதில் நெருங்கலாம் என்று கூறும் வகையில் ட்விட்டரில் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்து வருகிறார்.
அந்த வகையில் நிர்மல் குமார் என்பவர் எடப்பாடி பழனிசாமியை டேக் செய்து, “நாங்கள் தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறித்து வெளியூருக்கு அனுப்பலாமா?” என்று கேட்டிருந்தார். அதற்கு ஒன்றரை மணி நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தாராளமாக செய்யுங்கள் தம்பி” என்று பதிலளித்துள்ளார்.
தாராளமாக செய்யுங்கள் தம்பி! https://t.co/b0CWBUlZ57
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 13, 2020
ஊரடங்கை நீட்டிப்பதாக இருந்தால் ஒரு நாள் அவகாசம் கொடுங்கள், என் நிறைமாத கர்ப்பிணி மனைவி தனியாக உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க நான் செல்ல வேண்டும் என்று FaizArshi என்பவர் பதிவிட்டிருந்தார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, “உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் தம்பி. நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்” என்று பதில் அளித்துள்ளார்.
உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் தம்பி.
நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும். https://t.co/1aRTvNwgCc
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 13, 2020
பொன்னு1991 என்ற ட்விட்டர் ஐடி உள்ள நபர், “என்னோட அம்மா இறந்து விட்டார்கள் ..!
ஆனா அவங்க இறுதி முகத்தை பார்க்க கூட முடியதவனாக இருக்கிறேன்..!
வாழ்கையில் எந்த மகனுக்கு இப்படி நிகழ்வு நடக்க கூடாது..! அம்மா” என்று எடப்பாடி பழனிசாமியை டேக் செய்து பதிவிட்டுள்ளார். அதற்கு எடப்பாடி பழனிசாமி “மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது தம்பி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் தங்கள் தந்தையும் மனோ தைரியத்துடன் இருங்கள்” என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி இப்படி பதில் அளிப்பது நெட்டிசன்களை குஷிப்படுத்தியுள்ளது.
மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது தம்பி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்களும் தங்கள் தந்தையும் மனோ தைரியத்துடன் இருங்கள். https://t.co/TMremKw7vT
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 13, 2020