தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தரிசனம்…
Sep 28, 2019, 16:20 IST1569667824000
தமிழக பாஜக கட்சியின் தலைவராக செயலாற்றி வந்த, தமிழிசை சௌந்தர ராஜனை கடந்த 2 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது.
தமிழக பாஜக கட்சியின் தலைவராக செயலாற்றி வந்த, தமிழிசை சௌந்தர ராஜனை கடந்த 2 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது. அதன் பின், தெலுங்கானா மாநிலத்தின் வளர்ச்சி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பதவி ஏற்றுக் கொண்ட பின்பு முதன் முறையாக தமிழகத்திற்கு வருகைத் தந்துள்ள முன்னாள் பாஜக தலைவரும், தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று, திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.