தெருவோரம் வசிக்கும் மக்களுக்கு பிரியாணி வழங்கி அசத்தும் இமான் அண்ணாச்சி!

 

தெருவோரம் வசிக்கும் மக்களுக்கு பிரியாணி வழங்கி அசத்தும் இமான் அண்ணாச்சி!

கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் வருமானமில்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தெருவோரம் வசித்து வருபவர்கள் உணவில்லாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் தன்னார்வலர்கள் உணவு கொடுத்து வருகின்றனர். அதே போல அரசும் உணவுக் கூடங்கள் அமைத்து, ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறது. அந்த வகையில், சினிமா பிரபலங்களும் பண உதவியும், பொருட்கள் உதவியும் செய்து வருகின்றனர். 

ttn

சினிமா துறையில் வேலையில்லாமல் தவிக்கும் தொழிலார்களுக்கு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உதவி செய்ய வேண்டும் என்று ஃபெப்சி கோரிக்கை விடுத்தது. அந்த வேண்டுகோளுக்கு இணங்க பலரும் ஃபெப்சிக்கு நிதியுதவி அளித்தனர். இந்நிலையில் மக்களின் கஷ்டத்தை உணர்ந்த காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கூலிக்கு வேலை  செய்பவர்கள் மற்றும் தெருவோர மக்களுக்கு பிரியாணி சமைத்து வழங்கி வருகிறார். அவருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.