தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

 

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கி பெய்து வருகிறது. தற்போது அது வலுவடைந்து உள்ளது. இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் வருகிற 8-ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அன்றைய தினம் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கடலில் 40 -50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 25 டிகிரி முதல் 32 டிகிரி வரை பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.