தென் கொரியாவில் ஒரேநாளில் 142 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு

 

தென் கொரியாவில் ஒரேநாளில் 142 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு

தென் கொரியாவில் ஒரேநாளில் 142 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சியோல்: தென் கொரியாவில் ஒரேநாளில் 142 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதல் சிறிதளவு குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

ttn

உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2345 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 109 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தென்கொரியாவில் ஒரே நாளில் மட்டும் புதிதாக 142 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.