தென்னிந்திய திரைப்படத்துறையினருக்கு சிறப்புக்குழு அமைத்த நிர்மலா சீதாராமன் 

 

தென்னிந்திய திரைப்படத்துறையினருக்கு சிறப்புக்குழு அமைத்த நிர்மலா சீதாராமன் 

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். 

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். 

இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களை சந்தித்து, நாங்கள் அளித்த தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வருமான வரி பிடித்தத்தில் (TDS) நடப்பில் உள்ள பகிர்மான விகிதாச்சாரம் தொடர்பான குறைகளை எடுத்துரைக்கும் நினைவு பத்திரத்தை பெற்றுக் கொண்டதோடு, இது குறித்த எங்களது கருத்துகள், எண்ணங்களையும் கேட்டு தெரிந்துக்  கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி. தற்போதுள்ள நடைமுறையில் சில முக்கிய குறைகள் இருப்பதைப் புரிந்துக் கொண்ட நிதி அமைச்சர், உடனடியாக அதனை தீர்க்கும் விதமாக, திரைப்படத்துறையினரையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு குழு அமைத்திட உத்தரவிட்டார். 

Statement
சுமலதா எம். பி, திருமிகு. பிரஹலாத் ஜோஷி, பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர், திருமிகு. கே. ரகுராம கிருஷ்ண ராஜூ எம். பி., திரு. காட்ரகட்ட பிரசாத், திரு. ரவி கொட்டாரக்கரா, திரு. சி. கல்யான், திரு. டி ஆர். ஜெயராஜ், திரு. சா. ரா. கோவிந்து, திரு. ராக்லைன் வெங்கடேஷ், திரு. கே சி என் சந்திரசேகர், திரு. கே எல் தாமோதர் பிரசாத் ஆகியோரைக் உறுப்பினர்களாகக் கொண்ட சிறப்பு குழு, குறைகளை களைய தேவையான விஷயங்களை விவாதித்து, தீர்வை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.  சந்திக்க வாய்ப்பு வழங்கி, எங்களது குறைகளைக் கேட்டும், அதனை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தும் உதவிய, மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுக்கு ஒட்டுமொத்த திரைத்துறையினர் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.