தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

 

தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: வங்க கடலின் தென்மேற்கு பகுதியில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்.

இந்திய பெருங்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இதன் காரணமாக வருகிற 6-ம் தேதி தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் இடைவெளிவிட்டு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை வரை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கடலோர பகுதிகளில் கனமழையும், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்திருக்கிறது. என்று கூறப்பட்டுள்ளது.