தென்கொரியா பயணம் குறித்து மோடி அறிக்கை

 

தென்கொரியா பயணம் குறித்து மோடி அறிக்கை

இரண்டு நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடி, தனது பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடி, தனது பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மோடி 2 நாள் பயணமாக, நேற்று இரவு தென்கொரியா புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில், மேக்-இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட நடவடிக்கைகளில் முக்கிய பங்குதாரராக தென்கொரியா உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பு ஊக்குவிப்பதாக இருக்கிறது. இந்தியாவும், தென்கொரியாவும், இணைந்து செயல்படுவது இரு நாடுகள் இடையேயான உறவையும், வளத்தையும், அமைதியையும் மேம்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர், இரு நாடுகளுக்குமிடையே உள்ள கலாச்சார மற்றும் வணிக உறவை ஊக்குவிக்கும் விதமாக இந்த பயணம் அமையும் என பதிவு செய்துள்ளார்.தென்கொரியா சென்றுள்ள மோடி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்.