தூய்மை பணியாளர்களை மலர் தூவி கௌரவித்த பொதுமக்கள்!

 

தூய்மை பணியாளர்களை மலர் தூவி கௌரவித்த பொதுமக்கள்!

கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கொண்டுவரபட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கொண்டுவரபட்டுள்ளது. இருப்பினும் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர். 

ttn

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலுள்ள நாபா பகுதியை சேர்ந்த மக்கள்,  தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு மாலை அணிவித்து,  அவர்கள் மீது மலர் தூவியும், கைகளை தட்டியும் நன்றி தெரிவித்துள்ளனர். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.