தூத்துக்குடி கலவரத்திற்கு கிறிஸ்தவ பாதிரியார்களே காரணம்: ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு

 

தூத்துக்குடி கலவரத்திற்கு கிறிஸ்தவ பாதிரியார்களே காரணம்: ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு

தூத்துக்குடி கலவரத்திற்கு கிறிஸ்தவ பாதிரியார்களே காரணம் என நூல் வெளியீட்டு விழாவில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சர்ச்சைகுரிய வகையில் பேசியுள்ளார்

சென்னை: தூத்துக்குடி கலவரத்திற்கு கிறிஸ்தவ பாதிரியார்களே காரணம் என நூல் வெளியீட்டு விழாவில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சர்ச்சைகுரிய வகையில் பேசியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

இதையடுத்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில்,  கால்டுவெல்லின் பொய்யும், திராவிட இனவாதமும் நூல் வெளியிட்டு விழாவில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி கலவரத்திற்கு கிறிஸ்தவ பாதிரியார்களே காரணம் என குற்றம் சாட்டினார்.