தூங்காத என் கண்களை பார்த்து வாக்களியுங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்!

 

தூங்காத என் கண்களை பார்த்து வாக்களியுங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்!

உழைத்து கருத்த என்னைப் பார்த்து அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டு கொண்டுள்ளார். 

சென்னை: உழைத்து கருத்த என்னைப் பார்த்து அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டு கொண்டுள்ளார். 

தீவிர பிரசாரம் 

vote

 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதற்கான தேர்தல் பணிகளில் தமிழக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கரூர்  தொகுதியில்  அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 

தூங்காத என் கண்களை பார்த்து…

vijaybaskar

 

அப்போது பேசிய அவர், ‘ என் கடுமையான உழைப்பை பார்த்து, உங்களுக்காக உழைத்து கருத்த என் முகத்தை பார்த்து, தூங்காத என் கண்களை பார்த்து, யாரையும் குறை சொல்லாத என்னை பார்த்து, எனக்காக அதிமுகவுக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்டு கொண்டார். 

முன்னதாக  கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட  ஏமூர் புதூர் காலனியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட  தம்பிதுரை, ‘நீங்க ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க. அதற்காக உங்க கைல, காலுல விழ முடியாது’என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: அதிமுக விஞ்ஞானி தெர்மகோல் ராஜூ; கலாய் ட்வீட்டின் மூலம் பதிலடி தந்த குஷ்பூ