துலாம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் (2018-2019)

 

துலாம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் (2018-2019)

உங்கள்  ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து  2 ஆம் இடத்திற்கு செல்வதால் வரக்கூடிய குரு பெயர்ச்சி எவ்வாறான பலன்களை தரும் என்பதை பற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

துலாம் ராசிக்கு அதிபதியாக சுக்கிரன் விளங்குவதால் எதிலும் தனித்துவம் மிக்கவராகவும் தன்னம்பிக்கை உடையவராகவும் விளங்குவீர்கள்.

கலைத்துறையில் சிறந்து விளங்குவீர்கள் உங்கள் ராசிக்கு  3 மற்றும்  6 க்கு அதிபதியான குரு பகவான் இதுவரை உங்கள் ராசியிலேயே அமர்ந்து பல்வேறு இன்னல்களையும், உடல்நிலை குறைபாடுகளையும் கொடுத்து கொண்டு இருந்தார்.

குரு பகவான் வருகின்ற அக்டோபர் மாதம்  4ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2 ஆம் இடமாகிய விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளதால் ஆரோக்கியத்தில் மேன்மை,தாராள தனவரவு ,கணவன் மனைவி இடையே ஒற்றுமை,சுபகாரியங்கள் கைகூடும் .

 
குடும்பத்தில் மகிழ்ச்சி,குழந்தை பாக்கியம்,தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி,உத்தியோகத்தில் பதவி உயர்வு போன்ற மேன்மையான பலன்கள் உண்டாகும்.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 6 ஆம் இடமான மறைவு ஸ்தானத்தினை பார்ப்பதால் உடல் நிலையில் ஏற்பட்டு வந்த மந்த நிலைமாறும். மேலும் உங்களுடைய எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். கடன் தொல்லைகள் நீங்கும் காலகட்டமாக இந்த குருபெயர்ச்சி அமைந்துள்ளது. 

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 8 ஆம் இடமான ஆயுள் ஸ்தானத்தினை பார்ப்பதால் ஆயுள் அதிகரிக்கும் . உடல் நிலை பொலிவு பெரும் . தொழிலில் ஏற்பட்டு வந்த மந்த நிலை மாறும். பணவரவு அதிகரிக்கும்,முயற்சிகள் வெற்றி பெரும் .

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 10 ஆம் இடம் ஆகிய தொழில் ஸ்தானத்தினை பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். புதியவேலைவாய்புகள் உருவாகும். அரசு சம்மந்தபட்ட காரியங்களில் வெற்றிகள் ஏற்படும் . சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்புகள் கிடைக்கும் .

thulam mana

மாணவர்கள்:  துலாம் ராசி மாணவர்கள் விளையாட்டில் சாதனை புரிவார்கள் . வெளிநாடு சென்று பயில கல்வி கடன் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் ஆதாயம் கிட்டும்.

thulam pengal

பெண்கள்: துலாம் ராசி பெண்களுக்கு இந்த குருபெயர்ச்சி மூலம் புதிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகும். அரசாங்க உதவிகள் மற்றும் வெளிநாட்டு தொடர்புடைய உதவிகள் கை கூடும். 

thulam kalaingarkal

கலைஞர்கள்: துலாம் ராசி கலைத்துறையினருக்கு வருமானம் அதிகமாக இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் வெற்றிகள் உண்டாகும்.கலைஞர்களுக்கு புதிய தயாரிப்பாளர்களின் அறிமுகம் உண்டாகும். 

thulam arasiyal

அரசியல்வாதிகள்:  துலாம் ராசி அரசியல்வாதிகளுக்கு மிகவும் ஏற்றமான காலகட்டம். விசாக நட்சத்திரகாரர்கள் நினைத்த காரியத்தில் எளிதில் வெற்றி பெறுவார்கள். 

thulam vivasayam

விவசாயிகள்: துலாம் ராசி விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழிலில் அதிக முதலிடுகள் செய்வதால் நன்மைகள்  உண்டாக்கும். விவசாயத்திற்கு தேவையான நீர் பாசன வசதிகள் கிடைக்கும். விவசாய கடன் ரத்தாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

thulam parikaaram

பரிகாரம்: துலாம் ராசியில் பிறந்தவர்களில் குருவாயூர் சென்று கிருஷ்ணனை வாழிபாடு செய்து வர உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.