துரத்திய சாதி… தாயை சைக்கிளில் சுமந்து அடக்கம் செய்த மகன்

 

துரத்திய சாதி… தாயை சைக்கிளில் சுமந்து அடக்கம் செய்த மகன்

உயிரிழந்த தனது தாயை சைக்கிளில் கொண்டு சென்று மகன் அடக்கம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புவனேஸ்வர்: உயிரிழந்த தனது தாயை சைக்கிளில் கொண்டு சென்று மகன் அடக்கம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கர்பாபகல் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி சின்ஹானியா (45). தனது கணவர் இறந்த பின் 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் தண்ணீர் எடுக்க சென்ற அவர் தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய சரோஜ் முயன்றார். ஆனால் அவர் தாழ்ந்த சாதி என்பதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முன்வரவில்லை.

இதனையடுத்து, மனம் தளராத சரோஜ், தனது தாயின் உடலை சைக்கிளின் பின்னால் வைத்து 4-5 கிமீ நடந்தே உடலை காட்டுக்குக் கொண்டு சென்றார். போகிற வழியில், இது யார் என்று கேட்டவர்களுக்கு உடைந்த குரலில், ’எனது அம்மா’ என்று பரிதாபமாக கூறிவிட்டு யாருடைய உதவியுமின்றி தனியாளாக அவரை அடக்கம் செய்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.