துப்பாக்கி சுடும் போட்டி: தேசிய அளவில் வெற்றிபெறுவாரா அஜித்?

 

துப்பாக்கி சுடும் போட்டி: தேசிய அளவில் வெற்றிபெறுவாரா அஜித்?

தல அஜித் தேசிய அளவில் நடைபெறவுள்ள துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்குபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: தல அஜித் தேசிய அளவில் நடைபெறவுள்ள துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்குபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தல அஜித் நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறையிலும் மிகவும் சிறந்து விளங்கி வருகிறார். சமீபத்தில் இவர் தக்ஷா எனும் மாணவர் குழுவுடன் சேர்ந்து சிறிய அளவிலான ஆளில்லா விமானம் தயாரிக்க வழிகாட்டியாகச் செயல்பட்டு 
இரண்டாம் இடத்தை தட்டி சென்று சாதனை படைத்தது. 

இவர் தற்போது தனது கவனத்தைத் துப்பாக்கி சுடுதல் பக்கம் திருப்பியுள்ளார். இந்த நிலையில் கடந்த 27ம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் சார்பாகக் கோவை காவலர் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.  அதில் 10 மீட்டர் பிரிவில் சென்னை ரைபில் கிளப் சார்பாக நடிகர் அஜித் பங்கேற்றார் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். 

இந்த நிலையில் தற்போதைய செய்தி என்னவென்றால் வரும் டிசம்பர் மாதம் மத்திய பிரதேசம் போபாலில்  துப்பாக்கி சுடும் போட்டி நடைபெறவுள்ளது. தேசிய அளவிலான நடக்கும் இந்த போட்டியில் அஜித் சாதிப்பாரா என்று அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.