துப்பாக்கியால் மிரட்டி, என் மீது சிறுநீர் கழிக்கிறார் ! பா.ஜ.க தலைவர் மீது மனைவி புகார்!

 

துப்பாக்கியால் மிரட்டி, என் மீது சிறுநீர் கழிக்கிறார் ! பா.ஜ.க தலைவர் மீது மனைவி புகார்!

பா.ஜ.க தலைவர் ஒருவர் மீது, அவரது மனைவி முகநூல் பக்கத்தில் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். தன்னை துப்பாக்கியால் மிரட்டியும், தன் மீது சிறுநீர் கழித்தும் கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை அவரது மனைவியே சொல்லியிருப்பது பாஜக தலைவர்களிடத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க தலைவர் ஒருவர் மீது, அவரது மனைவி முகநூல் பக்கத்தில் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். தன்னை துப்பாக்கியால் மிரட்டியும், தன் மீது சிறுநீர் கழித்தும் கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை அவரது மனைவியே சொல்லியிருப்பது பாஜக தலைவர்களிடத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

facebook

இத்தனைக்கும், குற்றம் சாட்டப்பட்ட நபர், யாருக்கும் தெரியாதவர் அல்ல. பாஜக தலைவர்களிடத்தில் நன்கு அறிமுகமானவர்.  உத்தரப்பிரதேச மாநிலத்தின்  பிற்படுத்தப்பட்டோருக்கான நிதி மற்றும் வளர்ச்சித் துறையின் தலைவராகவும் இருந்து வருகிறார் பாபுராம் நிசாத். நீண்ட நாட்களாகவே அந்த பதவியில் இருந்து வரும் பாபுராம், பாஜகவின் தேசிய தலைவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர். உத்திரபிரதேச மாநிலத்தில் செல்வாக்கான நபராகவும் சொல்லப்படுகிறது. இவர் மீது தான், தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவரது மனைவி நீது நிசாத், அவரது முகநூல்  பக்கத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். 
இது குறித்து அவரது முகநூல் பக்கத்தில், “எனக்குத் திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. திருமணமானதிலிருந்தே அவர், என்னைத் துன்புறுத்தி, துப்பாக்கி முனையில் மிரட்டி, என் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியும் வருகிறார். இதுகுறித்து, பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்காமல், புகாரையும் பெற்றுக் கொள்ளாமல், இது குடும்பப் பிரச்சனை, பேசி சமாதானம் செய்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.  என்னுடைய சகோதரர்கள், பெற்றோர்களையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்” என கண்ணீருடன் மனைவி நீது நிசாத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தில் பிரதமர் மோடியும், முதல்வர் ஆதித்யநாத்தும் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.