துபாயில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா அறிகுறி : ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதி!

 

துபாயில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா அறிகுறி : ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதி!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 50க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 50க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வருகிறது. அங்கிருந்து தாயகம் திரும்பும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதால், அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ttn

சில நாட்களுக்கு முன்னர், ஓமனில் இருந்து சென்னை வந்த காஞ்சிபுரம் பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

ttn

இந்நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த நபருக்கு விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த சோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அந்த நபரை மருத்துவக் குழு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளது. துபாயில் இருந்து சென்னை வந்த அந்த நபர் திட்டச்சேரியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் என்று தெரிய வந்துள்ளது.