துணைவேந்தர் நியமனத்துக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம்

 

துணைவேந்தர் நியமனத்துக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம்

துணைவேந்தர் நியமனத்துக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்

சென்னை: துணைவேந்தர் நியமனத்துக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர், தமிழகத்தில் துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதனால் தாம் மிகவும் வருத்தமடைந்ததாக தெரிவித்த ஆளுநர், தகுதி அடிப்படையில் தான் துணை வேந்தர் நியமனம் நடைபெற வேண்டும் என முடிவு செய்து, இதுவரை 9 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில் தாம் நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆளுநரின் இந்த பேச்சு உயர்க்கல்வித் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், துணைவேந்தர் நியமனத்துக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் எதை மனதில் வைத்து குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது தெரியவில்லை என்றும், ஆளுநரும், தேடுதல் குழுவும் இணைந்து தான் துணைவேந்தர் நியமனங்களை செய்கிறார்கள் என்றும் விளக்கம் அளித்தார்.