‘துணிக்கடையில் உடைமாற்றும் அறையில் கேமரா’ : பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்!
10 நிமிடத்திற்குப் பிறகு கதவை தட்டிய பெண் ஊழியர் பக்கத்து அறைக்கு செல்லுங்கள் என்று கூற அதற்கு ஏன் இங்கு என்ன ஆயிற்று என்று கேள்வி எழுப்பியுள்ளார்
புதுடெல்லி: துணிக்கடையில் உடை மாற்றும்போது கடை உரிமையாளர் வீடியோ எடுத்ததாகப் பத்திரிகையாளர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்
டெல்லி எம்.பிளாக் மார்க்கெட்டில் துணிக்கடை ஒன்றில் பெண் பத்திரிகையாளர் துணி எடுக்க வந்துள்ளார். அப்போது தேவையான துணிகளை எடுத்துக்கொண்டு டிரையல் ரூமில் போட்டுப்பார்க்க சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த பெண் ஊழியர் ஒரு அறையை காட்டியுள்ளார். இதையடுத்து அப்பெண் அங்கு சென்று உடை மாற்றினார்.
10 நிமிடத்திற்குப் பிறகு கதவை தட்டிய பெண் ஊழியர் பக்கத்து அறைக்கு செல்லுங்கள் என்று கூற அதற்கு ஏன் இங்கு என்ன ஆயிற்று என்று கேள்வி எழுப்பியுள்ளார் அந்த பெண் பத்திரிகையாளர். அதற்கு மௌனம் காத்த அவர்கள் அந்த பெண் போலீசை கூப்பிடுவேன் என்று கூறிய பிறகே அந்த ரூமில் கேமரா இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடை உரிமையாளர் அவரது மகனை அழைத்து அந்த வீடியோவை நீக்கம் செய்ய கூறியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஐபிசி 354 சி பிரிவு கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடையின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.