துடிதுடித்த கன்று.. ஒரு தாய்ப்பசுவின் பாசப்போராட்டம்

 

துடிதுடித்த கன்று.. ஒரு தாய்ப்பசுவின் பாசப்போராட்டம்

ஒடிசா மாநிலத்தின் மல்கான்கிரியில் கன்றுவுடன் பசு ஒன்று சாலையில் நின்றிருந்தது. அந்த வழியே வேகமாக வந்த வாகனம் கன்றின் மீது மோதியதால் பலத்த அடிபட்ட கன்று கத்தியபடியே கிடந்தது.

துடிதுடித்த கன்று.. ஒரு தாய்ப்பசுவின் பாசப்போராட்டம்

எழுந்திருக்க முடியாமல் கிடைந்த கன்றுவை சுற்றி சுற்றி வந்து நக்கி கொடுத்துக்கொண்ட்டே இருந்தது பசு. இதை பார்த்து பரிதாபப்பட்டவர்கள், ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவை எடுத்து வந்து அதில் கன்றுவை தூக்கிப்போட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

துடிதுடித்த கன்று.. ஒரு தாய்ப்பசுவின் பாசப்போராட்டம்

கன்றுவை அவர்கள் தூக்கிச்சென்றதும் தாய்ப்பசு அங்கேயே நிற்கவில்லை. கன்றுவை சுமந்து செல்லும் வண்டியின் பின்னாலேயே ஓடியது.

கொஞ்ச தூரம் ஓடிவரும் அப்புறம் நின்றுவிடும் என்று நினைத்தவர்களுக்கு ஆச்சரியம். மருத்துவமனை வரையிலும் வண்டியின் பின்னாலேயே ஓடி வந்தது பசு.

பசுவின் இந்த பாசப்போராட்டத்தை பார்த்த பலரும் தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதைப்பார்த்த பலரும் நெகிழ்ந்து போவதால் அந்த வீடியோ வைரலாகிறது.