தீராத ஒருதலைக்காதல்.. பெண்ணின் தாயை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்!

 

தீராத ஒருதலைக்காதல்.. பெண்ணின் தாயை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்!

நாட்டுத்துப்பாக்கியால் ராமதேவியை பாலாஜி சுட்டுள்ளார். இதில்  ரமா தேவியின் காதில் காயம் ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நடிமப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமாதேவி. இவரது மகளை  அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்ற ராணுவ வீரர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதனால் மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு ராமதேவியை பாலாஜி வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால் அதை ரமாதேவி மறுத்துவிட்டார். 

ttn

இந்நிலையில்  ரமாதேவி மீது கோபத்திலிருந்த  பாலாஜி, நேற்று காலை மீண்டும் ரமாதேவி வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். இதில் இவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் ராமதேவியை பாலாஜி சுட்டுள்ளார். இதில்  ரமா தேவியின் காதில் காயம் ஏற்பட்டது.

ttn

சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியைக்கள் பாலாஜியை பிடிக்க முயன்ற நிலையில் அவர் வந்த ஆட்டோவில் ஏறி தப்பிவிட்டார். இதையடுத்து ராமதேவி மேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,  தப்பியோடிய பாலாஜியை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.