தீபிகா படுகோன் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் நடிகை ஷாலினி பாண்டே!
தமிழில் நடிகையர் திலகம், 100% காதல், கொரில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஷாலினி பாண்டே கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க ஆயுத்தமாகியுள்ளார்.
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. முதல் படத்திலேயே இளசுகளின் மனதைப் பறித்தார் இந்த கன்னக்குழி அழகி. தொடர்ந்து தமிழில் நடிகையர் திலகம், 100% காதல், கொரில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் முதன்முறையாக நடிகை ஷாலினி பாண்டே பாலிவுட்டில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் ‘ஜெயேஷ்பை ஜோர்டர்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் திவ்யங் தக்கர் இயக்குகிறார்.
முன்னதாக நடிகை ஷாலினி பாண்டே இயக்குநர் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் அவர் திடீரென்று அந்த படத்தைக் கைவிட்டு பாலிவுட்டுக்குச் சென்றுள்ளார். தற்போது ஷாலினி பாண்டேவுக்கு பதிலாக நடிகை அக்ஷரா ஹாசன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஷாலினி பாண்டே உச்ச நட்சத்திர நடிகையோ, முன்னணி நடிகையோ அல்ல. இருப்பினும் அவர் தற்போது பாலிவுட்டுக்கு சென்றுள்ளது சக நடிகைகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.