தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி காலமானார்!

 

தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி காலமானார்!

எழுத்தாளர்,பத்திரிகையாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.இவர்,தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

தி.மு.க-வைச் சேர்ந்தவர் வசந்தி ஸ்டான்லி.முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்.திடீர் உடல் நல குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் நேற்று இரவு பதினொரு மணிக்கு அவர் காலமானார்.இதை,வசந்தியின் சகோதரர் கணேஷ் ஸ்டான்லி அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

stalin vasanthi stanley

வசந்தி ஸ்டான்லி,1962-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டையில் பிறந்தவர்.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 2008 முதல் 2014 -ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.இவர்,தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

kalaignar vasanthi stanley

வசந்தி ஸ்டான்லியின் மறைவிற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது இறங்களைத் தெரிவித்திருக்கிறார்.பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது இறங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.