திருவள்ளூர் சோதனை சாவடியில் ரூ.90 லட்சம் பறிமுதல்.. போலீசார் தீவிர விசாரணை!

 

திருவள்ளூர் சோதனை சாவடியில் ரூ.90  லட்சம் பறிமுதல்.. போலீசார் தீவிர விசாரணை!

சமீப காலமாகச் சோதனை சாவடிகளில் பல லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு  வருகின்றன.

சமீப காலமாகச் சோதனை சாவடிகளில் பல லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு  வருகின்றன. அதனால் போலீசார் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல நேற்று திருவள்ளூர் சோதனை சாவடியில் 90 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ttn

திருவள்ளூர் அருகே உள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நேற்று வழக்கம் போல போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியே ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் பேருந்து வந்துள்ளது. அந்த பேருந்தை வழிமறித்த போலீசார், பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளிடமும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாம்பசிவராவ் என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி  ரூ.90 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த பணத்தைப் பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.