திருவள்ளுவர் சிலை மீது சாணத்தை அடித்த மர்ம நபர்கள் : தஞ்சையில் பரபரப்பு..!

 

திருவள்ளுவர் சிலை மீது சாணத்தை அடித்த மர்ம நபர்கள் : தஞ்சையில் பரபரப்பு..!

அவர் இந்து மதத்தை தான் போற்றினார் என்னும் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வள்ளுவரைப் போற்றும் வகையில், தஞ்சை பிள்ளையார் பட்டி என்னும் பகுதியில் திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மீது நேற்று இரவு மர்மநபர்கள் சாணத்தை அடித்துவிட்டு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, திருவள்ளுவரின் சிலையின் கண்களில் கருப்பு நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். சாணம் பூசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Thiruvalluvar statue

இது வரை எந்த மதங்களையும் சாராமல் போற்றப் பட்டு வந்த திருவள்ளுவரை, ‘அவர் காவி நிற உடையே அவர் வாழும் போது அணிந்திருந்ததாகவும், அதனால் அவர் இந்து மதத்தை தான் போற்றினார்’ என்னும் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திருவள்ளுவரைப் பற்றிய எந்த தகவலும் யாருக்கும் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில், இத்தகைய கருத்துக்கள் எழுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,  வள்ளுவரின் சிலை மீது சாணம் பூசியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.