திருவனந்தபுரம் – ராஜ்தானி ரயில் மீது டிரக் மோதி விபத்து: 2 பெட்டிகள் தடம் புரண்டது; ஒருவர் பலி
மத்திய பிரதேச மாநிலத்தில் ரயில் மீது டிரக் மோதிய விபத்தில் டிரக் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ரயில் மீது டிரக் மோதிய விபத்தில் டிரக் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
மத்தியப்பிரதேச மாநிலம் கோத்ரா – ரத்லம் ஊர்களுக்கு இடையே திருவனந்தபுரம் – ராஜ்தானி ரயில் சென்ற போது, ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற டிரக், அந்த ரயிலின் மீதி மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை 6:44 மணிக்கு நடைபெற்ற இந்த விபத்தில் சிக்கி டிரக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது. ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
#UPDATE: The truck driver died after he rammed into a manned level crossing between Godhra & Ratlam and hit Trivandrum Rajdhani train at 6:44 am today. Two coaches were derailed. No injuries reported to any passenger. #MadhyaPradesh pic.twitter.com/mWWcgnW3Gy
— ANI (@ANI) October 18, 2018
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தடம்புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டு ராஜ்தானி ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. விபத்க்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.