திருவண்ணாமலை தீபத்திருநாளுக்கு இதெல்லாம் கொண்டு வந்தால் தங்கம் பரிசு!

 

திருவண்ணாமலை தீபத்திருநாளுக்கு இதெல்லாம் கொண்டு வந்தால் தங்கம் பரிசு!

திருவண்ணாமலை தீப திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் துணிப் பை, சணல் பை கொண்டுவந்தால் குலுக்கல் முறையில் தங்கம் பரிசாக வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

திருவண்ணாமலை தீப திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் துணிப் பை, சணல் பை கொண்டுவந்தால் குலுக்கல் முறையில் தங்கம் பரிசாக வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத்திருவிழா வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் முள்ள 2668 அடி உயரமலையில் மகாதீபம் ஏற்றப்படும்.

இந்நிலையில் பக்தர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சணல் பை, துணிப் பை போன்றவற்றை கொண்டுவந்து பயன்படுத்தினால், அவர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. சுகாதார சீர்கேட்டை தடுக்கவும், தூய்மைப் படுத்தும் பணியை எளிமையாக்கவும் இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை தீபம்

இதற்காக டிசம்பர் 9 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 10 ஆம் தேதி மாலை 6 மணி வரை இதற்கான கூப்பன்கள் வழங்கப்படவுள்ளன. இந்த கூப்பன்களை கோவிலுள்ள குபேர லிங்கம், அண்ணா நுழைவாயில் மற்றும் ஈவேரா சிலை முன்பு உள்ள மையங்களில் பக்தர்கள் போடலாம். அவை கணினி முறையில் குலுக்கல் நடத்தப்பட்டு 12 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவர்களுக்கு தலா 2 கிராம் தங்கம், 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.