திருமாவளவன் மீது புகார் அளித்த இந்து முன்னணி!
புதுச்சேரியில் கம்பன் கலையரங்கில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மீது இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி சார்பில் தென் சென்னை மாவட்ட செயலாளர் வே.நித்தியானந்தம் சென்னை கிண்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள புகாரில், புதுச்சேரியில் கம்பன் கலையரங்கில் கடந்த 9ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் விதத்தில் பேசியுள்ளார். மேலும் இந்து மத உணர்வுகளையும், அதன் நம்பிக்கைகளையும் அவமதித்து மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். அவர் பேசியுள்ள வ வீடியோவை பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது.
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. எனவே அவர் மீது எனவே அவர் மீது 295, 295(A), 153(A), உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.