திருமாவளவன் – எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!
அப்போது எடப்பாடியுடன் நடத்திய சுமார் 1மணி நேரத்திற்கும் மேலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்.
சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு திருமாவளவன் வருகை புரிந்தார். அப்போது எடப்பாடியுடன் நடத்திய சுமார் 1மணி நேரத்திற்கும் மேலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சியைத் தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
முதலமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைகள்:
உள்ளாட்சித் தேர்தலில்
துணைத் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்!
சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும்!
தலித்/பழங்குடியின மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்சிப் (கல்வி உதவித் தொகை)வழங்க வேண்டும்! pic.twitter.com/9awKpT2Du3— Thol.Thirumavalavan (@thirumaofficial) November 17, 2019
திருமாவளவன் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் விழுப்புரம் தொகுதி எம்பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.