திருமாவளவனிடம் ஆதாரம் கேட்ட குஷ்பு! மனுதர்மம் 9.14 ஐ படிக்கச்சொல்லும் ரவிக்குமார்

 

திருமாவளவனிடம் ஆதாரம் கேட்ட குஷ்பு! மனுதர்மம் 9.14 ஐ படிக்கச்சொல்லும் ரவிக்குமார்

மனுதர்மமானது இந்து பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்றே குறிப்பிட்டிருக்கிறது என்பதுதான் திருமாவளவன் கூறியது. ஆனால், பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என பேசியதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டினால், பொய்யாக வக்கிர கும்பல் வதந்தி பரப்புவதாக திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருமாவளவனிடம் ஆதாரம் கேட்ட குஷ்பு! மனுதர்மம் 9.14 ஐ படிக்கச்சொல்லும் ரவிக்குமார்

மேலும், பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் எனும் சனாதன நூலை எரிக்கும் போராட்டம் நாளை நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்திருக்கிறார். மனுதர்மம் எனும் நூலினை தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொண்டிருக்கிறார் திருமாவளவன்.

இந்நிலையில், பாஜக பிரமுகர் குஷ்பு, மனு தர்மத்தில் பெண்களை அசிங்கப்படுத்தும் படி எதுவுமில்லை. அப்படியிருந்தால் திருமாவளவன் அதனை நிரூபிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

குஷ்புவின் இந்த கேள்விக்கு, எம்.பி.யும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ரவிக்குமார் பதிலளித்துள்ளார். அவர், மனுதர்மம் 9 .14 ஐ குஷ்பு படித்துப்பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.