திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்கு அளித்த வைரமுத்து!

 

திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்கு அளித்த வைரமுத்து!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்க பலரும் தங்கள் கட்டிடங்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், தே.மு.தி.க தங்கள் கட்சி அலுவலகங்கள், அரங்குகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கடிதம் வழங்கின.

கவிஞர் வைரமுத்து தன்னுடைய பொன்மணி திருமண மண்டபத்தை கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்க பலரும் தங்கள் கட்டிடங்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், தே.மு.தி.க தங்கள் கட்சி அலுவலகங்கள், அரங்குகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கடிதம் வழங்கின. தற்போது கவிஞர் வைரமுத்துவும் தன்னுடைய திருமண மண்டபத்தில் தற்காலிக மையம் அமைக்க பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளார்.

vairamuthu-78

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக எங்கள் திருமண மண்டபத்தை (பொன்மணி மாளிகை) அரசுக்கு ஒப்படைக்கிறேன் என்று முதலமைச்சருக்குக் கடந்த வாரம் கடிதம் எழுதியிருக்கிறேன். நாட்டின் நலமே நமது நலம்.” என்று கூறியுள்ளார்.