திருமணம் செய்து வைக்க மறுத்த பெண் நடுரோட்டில் வெட்டிக்கொலை: சென்னையில் பரபரப்பு!

 

திருமணம் செய்து வைக்க மறுத்த பெண் நடுரோட்டில் வெட்டிக்கொலை: சென்னையில் பரபரப்பு!

சென்னையில் சாலையின் நடுவே பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சென்னையில் சாலையின் நடுவே பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டி நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ரேவதி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ரேவதியின், கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனது இரண்டு மகள்களுடன்  ரேவதி  வசித்து வந்தார். ரேவதியின் மூத்த மகளுக்கும், வினோத் என்பவருக்கும் திருமணம் செய்ய கடந்த ஓராண்டுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்டது. ஆனால் வினோத்தின் நடவடிக்கை சரியில்லாததால் ரேவதி திருமண ஏற்பாடுகளை நிறுத்தியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த வினோத், ரேவதியை தொடர்பு கொண்டு திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் ரேவதி தொடர்ந்து மறுக்கவே வினோத்திற்கு ரேவதியின் மீதான கோபம் அதிகமாகியுள்ளது. 

இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ள ரேவதி, கிண்டி வண்டிக்காரன் தெருவில் ரேவதி வந்தபோது, நண்பர்களுடன் சேர்ந்து வழிமறித்த வினோத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ரேவதி மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த   வினோத், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேவதியின் கழுத்து, மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினார். இதையடுத்து ரத்தவெள்ளத்தில் மிதந்த ரேவதி, அதே இடத்தில் பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத் மற்றும் அவரது நண்பர்களை தொடர்ந்து தேடி வருவது குறிப்பிடத்தக்கது.