திருமணம் செய்துவைக்க மறுத்த தந்தை கொலை ! கல்யாணத்துக்கு பணம் தராததால் மகன் ஆத்திரம் !

 

திருமணம் செய்துவைக்க மறுத்த தந்தை கொலை ! கல்யாணத்துக்கு பணம் தராததால் மகன் ஆத்திரம் !

திருமணம் செய்து கொள்ள பணம் தராத தந்தையை மகன் குடிபோதையில் கொலை செய்த சோக சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

திருமணம் செய்து கொள்ள பணம் தராத தந்தையை மகன் குடிபோதையில் கொலை செய்த சோக சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தில் வசித்து வருகிறார் விவசாயி ஏழுமலை. இவரது இளைய மகன் பெயர் இளையராஜா. குடிபோதைக்கு அடிமையான இளையராஜா வேலைக்கு செல்லாமல் நாள்தோறும் குடித்து விட்டு வந்து தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சில சமயங்களில் பணம் இல்லையென்றால் தந்தையை மிரட்டி பணம் வாங்கிக்  கொண்டு சென்று டாஸ்மாக் கடையே கதி என்று இருந்துள்ளார்.

 

Ilayaraja villupuram

இந்நிலையில் நேற்று இரவு போதையில் மிதமிஞ்சி போன நிலையில் வீட்டிற்கு வந்த இளையராஜா தந்தையை பார்த்து, தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அதற்காக 2 லட்ச ரூபாய் தருமாறும் மிரட்டியுள்ளார்.

ஏற்கனவே குடிபோயில் சீரழிந்து போன மகனை நம்பி ஒரு பெண்ணை கட்டிவைத்தால்  அவளுடைய வாழ்க்கையும் வீணாகத்தான் போகும் என்ற எண்ணத்தில் பணம் கொடுக்க மறுத்துவிட்டார் தந்தை ஏழுமலை. இதைக் கேட்ட இளையராஜா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை ஏழுமலையை சரமாரியாக குத்தியுள்ளார். தந்தை ரத்த வெள்ளத்தில் சரிந்த்தை பார்த்து பயந்துபோன  இளையராஜா அங்கிருந்து தப்பி ஓடினார்.

பின்னர் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்ட ஏழுமலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். பின்னர் ஏழுமலை உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

து குறித்து வழக்கு பதிவு செய்த திருநாவலூர் காவல் நிலைய போலீசார் தலைமறைவாக இருந்த இளையராஜாவை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இசைஞானி போல் வரவேண்டும் என மகனுக்கு இளையராஜா என பெயர் வைத்தாரா தெரியவில்லை. மகன் சிறையில் வாசித்துக் கொண்டிருக்கிறார் சோக கீதத்தை !