திருமணமான இரண்டாம் நாளே வீட்டை விட்டு ஓடிய இளம்பெண்: அம்பலமான திருமண நாடகம்!

 

திருமணமான இரண்டாம் நாளே வீட்டை விட்டு ஓடிய இளம்பெண்: அம்பலமான திருமண நாடகம்!

திருமணமான இரண்டாம் நாள் மணப்பெண் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா: திருமணமான இரண்டாம் நாள் மணப்பெண் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்தர். இவரது மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் சுரேந்தருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் முடிவெடுத்துள்ளனர்.  இதற்காக தரகர் ஒருவரை சுரேந்தர் குடும்பத்தினர் அணுகியுள்ளனர். தரகர் ஜிந்த் என்ற பகுதியில் ஒரு பெண் இருப்பதாகக் கூறியுள்ளார்.  இதற்காக அவர்கள் தரகருக்கு ரூ.70,000 கொடுத்துள்ளனர்.

surendar

இதையடுத்து பெண் வீட்டுக்கு சென்று திருமணம் பற்றி பேச அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து கடந்த மே மாதம் இருவருக்கு திருமணம் நடந்துள்ளது.  திருமணமான இரண்டாவது நாள் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக லூதியானா செல்வதாக சுரேந்தரின் மனைவி  கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால்  திருமணம் முடிந்து வீடு திரும்பாததால், மனைவியைத் தேடி அவரின்  சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு சென்றபோதுதான்  தான் ஏமாற்றப்பட்டது சுரேந்தருக்கு தெரியவந்தது.

 

அதாவது அங்கு சென்ற போது, இந்து மதத்தை சேர்ந்தவர் என்று திருமணம் முடித்து வைக்கப்பட்ட அப்பெண் இஸ்லாமிய மதத்தவர் என்றும் தெரியவந்தது. அவள் வரமாட்டாள் என்று கூறி அப்பெண்ணின் குடும்பத்தினரும், தரகரும் மிரட்டி அனுப்பியுள்ளனர்.  இதுகுறித்து சுரேந்தர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதிமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.