திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து

 

திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. 

டெல்லி ஜான்சி ராணி வணிகப் பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி எனும் தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீயால் 45க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

திருப்பதி தீ

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் உள்ள பூந்தி தயாரிக்கும் சமையல் அறையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. அதாவது சமையலறை அடுப்புகளில் எரிந்துகொண்டிருந்த தீ அடுப்புக்கும் சுவருக்கும் இடையே கொட்டி வைக்கப்பட்டிருந்த கழிவுகள் மீது பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து புகைப்போக்கி வழியாக தீ வெளியேறியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் எழுந்ததால் பக்தர்கள் அலறியடித்தப்படி சென்றனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.