திருநங்கை திருமணத்தை தடுத்து நிறுத்திய கோவில் நிர்வாகம்: பின்னணி என்ன?

 

திருநங்கை திருமணத்தை தடுத்து நிறுத்திய கோவில் நிர்வாகம்: பின்னணி என்ன?

திருநங்கைக்கும், இளைஞர் ஒருவருக்கும் நடக்கவிருந்த திருமணம் கோவில் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: திருநங்கைக்கும், இளைஞர் ஒருவருக்கும் நடக்கவிருந்த திருமணம் கோவில் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகன் அருண்குமார். இவர் டிப்ளமா முடித்துள்ளார். இதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பேச்சிராமன் – வள்ளி தம்பதியர். இவர்களது மகள் ஸ்ரீஜா. இவர் பி.ஏ. படித்துள்ளார். திருநங்கையான ஸ்ரீஜாவுக்கும், அருண்குமாருக்கும் இருவரது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டன.

transgender

இவர்களது திருமணம், அப்பகுதியில் உள்ள  ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டது. திருமண நாளான இன்று மணமக்கள், உறவினர்களுடன்  கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கோவில் நிர்வாகத்தினர் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று  கூறினர். இதனால் மணமக்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இளைஞருக்கும் திருநங்கைக்கும் நடக்கவிருந்த திருமணம், கோவில் நிர்வாகத்தால் தடைப்பட்டது அப்பகுதியில் சலசலப்பை  ஏற்படுத்தியது.