திருநங்கையை திருமணம் செய்த இளைஞர் பாதுகாப்புக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்! 

 

திருநங்கையை திருமணம் செய்த இளைஞர் பாதுகாப்புக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்! 

மதுரையில் திருநங்கையை திருமணம் செய்து கொண்ட இளைஞர் பாதுகாப்புக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். 

மதுரையில் திருநங்கையை திருமணம் செய்து கொண்ட இளைஞர் பாதுகாப்புக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். 

மதுரை சுண்ணாம்பு காளவாசல் செல்வ விநாயகர் கோவிலை சேர்ந்தவர் பஷீர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் மனைவி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்த திருநங்கை கல்கியை கடந்த சில நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

Madurai collector office

இருவரும் அப்பகுதியிலுள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதன்பின் பஷீர் தன்னுடைய குடும்பத்தினர் அச்சுறுத்துவதாகவும், தங்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி கல்கியுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள பஷீர், இரண்டு பேரும் காதலிப்பதாகவும், இறுதிவரை சேர்ந்துவாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.