திருநங்கையாக நடித்த லாரன்ஸ்- திருநங்கைகளுக்கு வீடு கட்டுகிறார் – பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார்1.5 கோடி உதவி ..
பிரபல பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார் திருநங்கைகளுக்கு வீடு கட்ட நிதி உதவியாக 1.5 கோடி ரூபாய் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டிடம் வழங்கியுள்ளார் .
காஞ்சனா ,முனி போன்ற படங்களின் மூலம் தமிழ் ,மற்றும் தெலுங்கு ,ஹிந்தி சினிமாவில் வெற்றிகரமாக வலம் வரும் நடிகரும்,இயக்குனருமான ராகவா லாரன்ஸிடம் ,பிரபல பாலிவுட் ஹீரோ அக்ஷய்குமார் 1.5 கோடி ரூபாயை திருநங்கைகளுக்கு வீடு கட்ட நிதியுதவியாக வழங்கியுள்ளார் .
ஹாலிடே,ரௌடி ரத்தோர்,ஹௌஸ் புல்,லட்சுமி பாம் போன்ற இன்னும் பல ஹிந்தி படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகரும்,இயக்குனரும்,தயாரிப்பாளருமான அக்ஷ்ய்குமார் ராகவா லாரன்ஸ் நடத்தும் ட்ரஸ்ட் மூலம் இந்த பணத்தை வழங்கினார்.
@akshaykumar pic.twitter.com/1PE6hvLwQk
— Raghava Lawrence (@offl_Lawrence) March 1, 2020
ஏற்கனவே லாரன்ஸ் ட்ரஸ்ட் மாற்று திறனாளிகளுக்கு ஒரு ஹோம் நடத்தி,அவர்களுக்கு மருத்துவம்,கல்வி வசதிகள் செய்து கொடுத்து பல நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் .அந்த ட்ரஸ்டின் 15 வது ஆண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு,அக்ஷய்குமார் கொடுக்கும் நிதியையும் சேர்த்து திருநங்கைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தை தொடங்க உள்ளார் .
அவர்களுக்கு நிலத்தை லாரன்ஸ் ட்ரஸ்ட் வழங்கியுள்ளது.வீடு கட்டும் திட்டத்திற்கான பூமி பூஜை விரைவில் தொடங்குமென லாரன்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.லாரன்ஸ் காஞ்சனா படத்தில் திருநங்கையாக நடித்து அவர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்.இப்போது வீடும் அவர்களுக்கு கட்டி கொடுப்பதால் அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றவிருக்கிறார்.