திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகள் தீவிரம்

 

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி  கோயிலில் நடைபெற உள்ள கந்த சஷ்டி விழாவிற்கு கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் தீவிரமாக முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி  கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவான மகா சஷ்டி விழா என்று அழைக்கப்படும் கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி வியாழக்கிழமைதொடங்குகிறது.

thirhjk

இவ்விழாவின் ஆரம்ப நிகழ்ச்சியாக அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜையும் , 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படும் நிகழ்ச்சியும்  நடைபெற உள்ளது.

காலை 9 மணிக்கு உச்சிகால பூஜையும் , பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் , பின்னர் மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறுகிறது.

thirufhh

இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நவம்பர் 13-ந்தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜையும்,காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெற உள்ளது.

மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

நவம்பர் 14-ந்தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகளும் பின்னர் 5 மணியளவில் அம்பாள் தபசுக்காட்சிக்கு புறப்படுதலும் நடைபெறும். மாலை 6.30-க்கு சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றுதல், இரவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

thirughjk

திருவிழாக்காலங்களில் நாள்தோறும் காலையும், மாலையும் கலையரங்கில் பக்திச் சொற்பொழிவு நிகழ்சிகள் நடைபெற உள்ளன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைமாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர் .