திருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபம் திறப்பு !

 

திருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபம் திறப்பு !

பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபம் 1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் செலவில், நூலகத்துடன் அமைக்கப்படும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

திருச்செந்தூரில்  பத்திரிக்கை அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபம் 1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் செலவில், நூலகத்துடன் அமைக்கப்படும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அதன் கட்டுமானப்பணி முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில், இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.  60 சென்ட் நிலத்தில் கட்டப்பட்ட இந்த மணிமண்டபத்தைச் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசு நிறுவியது. 

ttn

இன்று காலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி ஆதித்தனாரின் மணிமண்டபத்தைத் திறந்து வைத்தார். அங்கு இருந்த ஆதித்தனார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர், மணிமண்டபத்தின் அருகே அமைக்கப் பட்டிருந்த நூலகத்தை பார்வையிட்டார்.

ttn

அதன் பின்னர், மணிமண்டபத்தில் இருந்த பா.சிவந்தி ஆதித்தனார் முழு உருவச் சிலையை முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ், அதிமுக அமைச்சர்கள், வாரியத்தலைவர்கள் மற்றும் ஆதித்தனாரின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.