திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் கைது – மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியதால் நடவடிக்கை

 

திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் கைது – மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியதால் நடவடிக்கை

கொரோனா பாதித்த நபர் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பி அடாவடி செய்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி: கொரோனா பாதித்த நபர் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பி அடாவடி செய்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று கொரோனாவால் 913 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 969 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

trichy

இந்நிலையில், திருச்சியில் கொரோனா பாதித்த நபர் ஒருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அவர் ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து அடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மீது எச்சில் துப்பி, தன்னுடைய முக கவசத்தை அவர்கள் மீது அந்த நபர் வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.