திராவிட கட்சிகளை தேசிய கட்சிகள் அழிக்க பார்க்கிறது: தம்பிதுரை தாக்கு

 

திராவிட கட்சிகளை தேசிய கட்சிகள் அழிக்க பார்க்கிறது: தம்பிதுரை தாக்கு

திராவிட கட்சிகளை தேசிய கட்சிகள் அழிக்க பார்க்கின்றன என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

திருச்சி: திராவிட கட்சிகளை தேசிய கட்சிகள் அழிக்க பார்க்கின்றன என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட ஸ்டாலின்,அவரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் கூட்டத்தை கூட்டாமல் அணை விவகாரத்துக்கு ஏன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். இது அரசியல் நாடகம் இதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் திராவிட கட்சிகளை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. நாங்கள் நேரில் சென்று நிவாரணம் கேட்ட பிறகு தான் தமிழகத்திற்கு மத்திய குழுவை அனுப்பி உள்ளது. அதே நேரத்தில் கேரளாவில் பாதிப்பின் போது உடனடியாக பிரதமர் நரேந்திர மோடி நிதி வழங்கினார். ஆனால் இதுவரை தமிழகத்திற்கு நிவாரணம் வழங்கவில்லை என்றார்.