திமுக நடத்திய பேரணி Bore பேரணி- அமைச்சர் பாண்டியராஜன்

 

திமுக நடத்திய பேரணி Bore பேரணி- அமைச்சர் பாண்டியராஜன்

திமுக நடத்திய பேரணி  பிசு பிசுத்து போயுள்ளது போர் பேரணி இல்லை bore பேரணி என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

திமுக நடத்திய பேரணி  பிசு பிசுத்து போயுள்ளது போர் பேரணி இல்லை bore பேரணி என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட நேமிளச்சேரி 5வது வார்டு பகுதிகளில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக நடத்திய பேரணியில் கூட்டமே இல்லை.  பேரணி பெரும் எழுச்சி இல்லாத உணர்வு ரீதியாக ஒன்று படாத நிலையில்இருந்தது. இந்த பேரணி திமுகவிற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதிமுக பாமக எம்பிகளின் வீட்டை முற்றுகை இடவேண்டும் என்ற ஆ.ராசாவின் கருத்து கண்டிக்க தக்கது. குடியுரிமை சட்ட தை வைத்து அரசியல் செய்ய முடியும் என்பது வருத்துக்குரியது அவர்களிடம் உண்மை இல்லை.

pandiyarajan

இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். அமித்ஷா அதனை செய்து தருவதாக கூறியுள்ளார். தமிழருக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் ஈழ தமிழருக்கும் கிடைக்கிறது. எதிலெல்லாம் அரசியல் செய்யக்கூடாதோ அதிலெல்லாம் அரசியல் செய்யக்கூடிய விரக்தி நிலையில் திமுக உள்ளது. அதிமுக செய்வது ஆரோக்கிய அரசியல் திமுக செய்வது அசிங்க அரசியல் எந்த நல்ல எண்ணமும் இல்லை. ” எனக்கூறினார்.